சட்டவிரோதமாக கடல்மார்க்கத்தின் மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் தலை மன்னார் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படைய நிறைவேற்று முகாம் அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் மூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த குறித்த 8 பேரும் கைதாகியுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் சிறுவர்கள் மூவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.