ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமைக்கு பின்னரும் தேர்தல் பிரச்சார விளரம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.