நாளை முதல் விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வார இறுதி தினமான நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 12ம் திகதி கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரவு 07.35 மணிக்கு கொழும்பு கோட்டையில் பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், மறுநாள் அதிகாலை 4.43 மணியளவில் பதுளையை சென்றடையும். பதுளையில் இரவு 08.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையுமென புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.