எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விசேட தினமாக இன்றைய (7) தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. த
பால் மூல வாக்களிப்புக்காக ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் திகதியும் ஒதுக்கப்பட்டிருந்தன. சகல பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த இரு தினங்களில் இடம்பெற்றன. இந்த தினங்களில் இதுவரையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்கள் இன்று வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.