ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு ஆயிரத்து 100 பஸ் வண்டிகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை விநியோகிக்கும் தபால் அலுவலகங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை விநியோகிக்கும் பணி 75 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.