தாய்லாந்து தாம்லூங் குகை மீள திறக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட மாணவர்கள் 12 பேர் தமது பயிற்சியாளருடன் குகைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவத்தையடுத்து மீண்டும் குகை சுற்றுலாப்பயணிகளுக்கென திறக்கப்பட்டுள்ளது. குகையை பார்வையிடுவதற்கு நேற்றையதினத்தின் மாத்திரம் 2 ஆயிரம் பேர் வருகைதந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் குகைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தாம்லூங் குகையில் 17 நாட்கள் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்கும் பணியில் 90 சுழியோடிகள் ஈடுபட்டனர். அவர்கள் வெற்றிகரமாக குகையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது.