சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 32 மில்லியன் ரூபாவாகுமென சுங்க ஊடகபேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 14 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. 4.7 கிலோ கிராம் நிறையுடைய தங்க ஆபாரணங்களின் பெறுமதி 32 மில்லியன் ரூபாவாகுமென சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளையும் வசிப்பிடமாக கொண்ட 30 க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக சுங்கப்பணிப்பாளர் நாயகம் சமன் ரணவெனவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.”