கடந்த 24 மணித்தியாலயங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய என்பவற்றுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சட்டமீறல் தொடர்பான 109 முறைப்பாடுகள் அதில் உள்ளடங்குகின்றன. கடந்த 8 ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 250 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.