நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா, காலி, மாத்தறை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.