சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும். சமையல் எரிவாயுவை பதுக்குதல், நிபந்தனையுடன் விற்பனை செய்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தொடர்பில் 31 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.