சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்பசங்கம் தெரிவித்துள்ளது. இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.