பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்தலைக் கோரி பிரதமர் போரிஸ் ஜோன்ஸனினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்ற பொதுச்சபையில் வெற்றியடைந்துள்ளது. 438 க்கு 20 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலுக்கான ஆதரவு தெரிவிக்கும் சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.