மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டப்பாய ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் இளைஞர் யுவதிகளுக்கு குறுகிய காலத்தில் தொழிற் பயிற்சியினை வழங்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இங்குள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலத்தில் தொழில்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான கல்வி நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுமெனவும் கோட்டப்பாய ராஜபக்ஷ தெரிவித்தார்.