இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 ம் திகதி காலை 7.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். இதுதொடர்பாக கட்சி பிரதிநிதிகளை அறிவுறுத்தும் கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.