ரஷியாவில் ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 8 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் ரஷியாவின் சிட்டா பகுதி இராணுவத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. பணியிலிருந்த இராணுவ வீரர்கள் மீது மற்றுமொரு ராணுவ வீரர் திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் 8 பேர் ஸ்த்தலத்திலேயே பலியாகினர்.
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிசூட்டை மேற்கொண்ட இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.