ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இதுதொடர்பில் ஐ.நா. சபைக்கான ஈரானின் மனித உரிமை விசாரணையாளர் ஜாவீத் ரஹ்மான் கருத்து வெளியிட்டுள்ளார். ‘இது நம்பகமான தகவல், ஈரானில் தற்போது சுமார் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். உலக நாடுகளில் ஈரானில்தான் மரண தண்டனைகள் அதிகமாக நிறைவேற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமென அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.