சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு காணப்படின் அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீர தெரிவித்தார்.
எரிவாயுக்கான கேள்வி அதிகரித்தமையே தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி ஏற்பட்டுள்ளது. எரிவாயு எடுத்துவரும் கப்பல் வந்தடையவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் செய்திகள் வெளியிடப்படும் அளவுக்கு எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை. சந்தை நிலவரம் தொடர்பில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீர தெரிவித்தார்.