அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை விசாரிக்கும் பணி இன்றுடன் நிறைவடைகின்றது.
இவ் ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் 31 ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனால் முறைப்பாடுகளை விசாரிக்கும் பணியை இன்றுடன் நிறுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பணி பூர்த்தியடைந்ததன் பின்னர் குறித்த சாட்சிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.