சின்னத்திரையின் கலை விருந்தான சுமதி விருது வழங்கும் விழாவில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பல படைப்புக்கள் விருதுகளை தட்டிக்கொண்டன. இம்முறை 24 தடவையாக சுமதி விருது வழங்கும் விழா ஒழுங்கு செய்யப்பட்டது.
இம்முறை சுமதி விருது வழங்கும் விழாவில் சிறந்த தொலைக்காட்சி நடப்பு செய்தி தொகுப்புக்கான இரண்டாவது இடத்தை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் இந்திக்க வீரக்கோன் பெற்றுக்கொண்டார். அவரால் தொகுத்து வழங்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான பாலம் எனும் நிகழ்ச்சிக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான 3 ம் இடத்தை சுயாதீன தொலைக்காட்சி தினூஷி தீரசிங்க பெற்றுக்கொண்டார். சிதார களுவாராய்ச்சி சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை தட்டிக்கொண்டதுடன்.
சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்காக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ச்சந்திமா பிரேமரத்ன விருதை தட்டிக்கொண்டார். அவர் இயக்கிய உள்பத்த எனும் சஞ்சிகை நிகழ்ச்சியே இவ்விருதை பெற்றுக்கொண்டது. சிறந்த தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ச்சந்தன அல்மேதா தயாரித்த ஐரிஎன் பல்சர் டெயார் வென்சர் நிகழ்ச்சி விருத்துக்கு இலக்காகியது.சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை ஹேசான் வசந்த இயக்கிய நர்த்தனையென் நிவாடுவக் எனும் நிகழ்ச்சி பெற்றுக்கொண்டது.
இதேவேளை சுயாதீன தொலைக்காட்சி சிறந்த கிரபிக் எனிமேஷனுக்கான மற்றுமொரு விருதையும் தட்டிக்கொண்டது. எத்பௌர நிகழ்ச்சிக்கான கிரபிக் எனிமேஷனுக்கென எரந்த ரூபசிங்க விருதைப் பெற்றுக்கொண்டார்.
சிறந்த தொலைக்காட்சி எழுந்து வரும் நடிகருக்கான விருதை சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகிய கூம்பியோ நாடகத்தில் பிரியந்த எனும் பாத்திரம் ஏற்று நடித்த கலன குணசேகர பெற்றுக்கொண்டார். சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சகோதரையா எனும் நாடகத்தில் நடித்த களனி தொடன்தென்ன சிறந்த எழுந்துவரும் நடிகைக்கான விருதை தட்டிக்கொண்டார்.
முதலாவது படைப்பாற்றல் விருது கூம்பியோ தொலைக்காட்சி நாடகத்தின் ஹிருணிக்காவின் பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய யுரேனிய கௌசிக்கா பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது படைப்பாற்றல் விருதையும் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சங்ஹிந்த நடாகத்தில் நடித்த தீபானி சில்வா பெற்றுக்கொண்டார்.
சிறந்த தொலைக்காட்சி இசை இயக்குனருக்கான விருதை சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சகோதரயா எனும் நாடகத்திற்கு இசை வழங்கிய கசுன் கல்ஹார பெற்றுக்கொண்டார்.
வாழ்வில் ஒரு தடவை மாத்திரம் கலைஞர் ஒருவருக்கு கிடைக்கின்ற யு.டபிள்யு சுமதிபால ஞாபகார்த்த விருது சிரேஷ்ட நடிகர் எலக்செண்டர் பெர்னாண்டோவுக்கும் சிங்கள சினிமாவில் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்ற சிரேஷ்ட நடிகை சுமண அமரசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சுமதி விருது வழங்கும் விழாவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.