தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொள்கை மற்றும் இலக்கு தொடர்பில் விவாதிக்க தயாரென சஜித் பிரேமதாச டுவிட்டர் வலைத்தளத்தினூடாக குறிப்பிட்டுள்ளார். பலம் வாய்ந்த வேட்பாளர் ஒருவர் தனது எதிர்த்தரப்பு வேட்பாளருடன் மோத அச்சப்படக்கூடாதெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் சஜித் பிரேமதாசவின் அழைப்புக்கு கோட்டாப்ய ராஜபக்ஷ இதுவரை பதில் வழங்கவில்லை. இதேவேளை விவாதத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஒளிபரப்பான ஐரிஎன் ஊடக வலையமைப்பு தயாராகவுள்ளது. நாட்டிற்கு மேலும் மேம்படுத்தப்பட்ட கலாசாரத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஐரிஎன் ஊடக வலையமைப்பு விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளது.