தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜாஎல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.