புலியங்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே அவர் மோதுண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.