பகிரங்க விவாதமொன்றுக்கு வருகைதருமாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான கோட்டப்பாய ராஜபக்ஷவிற்கு சவால்விடுத்துள்ளார். நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எதிர்கால கொள்கை மற்றும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டுமென ருவிட்டர் வலைத்தளம் ஊடாக சஜித் பிரேமதாச கோட்டாப்பாய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பலமிக்க வேட்பாளரான தமது எதிர் போட்டியாளர் இவ்வாறு மோதுவதற்கு பயப்படக்கூடாதெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எவ்வாறெனினும் இதுவரை இது குறித்து கோட்டாப்பாய ராஜபக்ஷவிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென தெரியவருகிறது. இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அமைச்சர் அஜித் பி. பிரேரா இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். நாட்டின் எதிர்காலத்திற்காக இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த விவதாம் அவசியமென அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.