நாட்டின் அனைத்து சமூக பொறுப்புக்களும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெறுவதற்கு பொறிமுறையொன்று அவசியமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பில் தீர்வுகளை எடுக்கும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.