தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை ஆயிரத்த 500 ரூபாவாக அதிகரிப்பதே தனது எதிர்பார்ப்பென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.