வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பா.உ ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட சந்தேகநபர்கள் வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 2 இலட்சம் வீதம் 2 சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர். இவர்களது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.