கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் நாளை 3 மணிவரை நீர்வெட்டு அமுலிலிருக்கும் கொழும்பு மாநகர நீர்விநியோக மற்றும் கழிவு நீர் செயற்திட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு காரணமாக நீர்துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.