நான்கு மகளிர் அணியினர் கலந்து கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவையில் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டி இதுவாகும். முதலாவது போட்டி தேஸ்டன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. பங்களாதேஸ், இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இறுதி போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.