ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. ஹகிபிஸ் சூறாவளி ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியுள்ளது. சூறாவளி கரையை கடந்த போதிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக போக்குவரத்து தடைப்படடுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் காரணமாக 5 இலட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.