வீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஓய்வுபெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் டுவெண்டி – 20 கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கர், ப்ரைன் லாரா, விரேந்த்ர ஷேவக், முத்தையா முரளிதரன், டி.எம்.டில்ஷான், ஜொன்டி ரோட்ஸ், ப்ரெட்லி, சந்தபோல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 110 ஓய்வுபெற்ற வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் நடத்தப்படும் இப்போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் சபையும் அனுமதி வழங்கியுள்ளது.