ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 8ம் திகதி முதல் இதுவரை இம்முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 565 முறைப்பாடுகளும், மோதல் சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனிடையே முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.