புரட்சிமிக்க அரசியல் யுகமொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இளம் சமூகத்தினரை இணைத்துக்கொண்டு அபிவிருத்தியில் புரட்சியை ஏற்படுத்துவதே நோக்கமாகும். இதனூடாக நாட்டை பலப்படுத்த முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சிறந்த கொள்கை மிக்க யுகமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கைமிக்க யுகத்தில் ஒழுக்கம் மிக்கவர்களே ஆட்சிசெய்வர். மோசடி, கொள்ளை உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோரை விலக்கி அரச சொத்துக்களை கொள்ளையடித்தோரை ஓய்வில் அனுப்பி சிறந்த கொள்கைகளை கொண்ட இளம் சமுதாயத்தினூடாக நாட்டை கட்டியெழுப்புவோமென உறுதியளிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.