சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமனோர் இடம்பெயர்ந்துள்ளனர். குர்திஷ் போராளிகளின் தளங்களை இலக்கு வைத்து சிரியா – துருக்கி எல்லையில் துருக்கி படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் எல்லைப் பகுதியில் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் சிரியாவின் வடக்கு எல்லையிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை தாக்குதல்களினால் இதுவரை பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.