2019 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமட் அலிக்கு 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்கப்படுவது 100வது அமைதிக்கான நோபல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான எரித்ரியாவுடனான சிக்கலான எல்லை பிரச்சினையை தீர்த்ததற்காகவும் அமைதியை ஏற்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்புக்காக அவரின் முயற்சிக்காகவும், அகமட் அலிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்பிரட் நோபலின் உயிலின்படி உலக அமைதிக்கான நோபல் பரிசை நோர்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகின்றது.