அணுவாயது ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளை, அமெரிக்கா தூண்டிவருகிறது. இதற்கு பதிலடியாக, ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது.
தேசபாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே குறுகிய மற்றும் நெடுந்தூர ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்நிலையில் குறித்த சோதனைகளைக் கண்டிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றமை கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை தொடருமானால் அணு ஆயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபடுவோமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.