எல்பிட்டிய பிரதேச சபை தேரதலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் பணிகள் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளன. 47 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 537 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதேவேளை இன்று இரவு 10 மணிக்கு முன்னர் தேர்தல் முடிவு வெளியிடப்படுமென காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதானபத்திரண மேலும் தெரிவித்துள்ளார்.