புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் 52 வீதம் நிறைவடைந்துள்ளன. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேபிளில் அமைக்கப்படும் முதலாவது பாலமாக களனி புதிய பாலம் அமைந்துள்ளது.
கொழும்பு நகரில் அமைக்கப்படவுள்ள தூண்களை கொண்ட அதிவேக நெடுஞ்சாலை, புதிய களனி பாலத்தினூடாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும். இதன்மூலம் புதிய களனி பாலத்திலிருந்து 10 நிமிடங்களில் பத்தரமுல்லை நகரை அடையமுடியும். பொரளை மற்றும் தேசிய வைத்தியசாலையை 6 நிமிடங்களில் சென்றடைய முடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. புதிய களனி பாலம் நிர்மாணிக்கப்பட்டதும் கொழும்பு நகரின் வாகன நெரிசல் 50 வீதத்தால் குறைவடையுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.