பாகிஸ்தானுக்கு எதிரான 20 – 20 தொடரை 3 க்கு 0 என கைப்பற்றிய இலங்கை அணி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்துள்ளது. தொடரின் 3 வது போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. தனது கன்னி போட்டியில் விளையாடிய ஓசத பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 148 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஹரீஸ் சுஹைல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாகவும் போட்டித் தொடரின் ஆட்டநாயகனாவும் வனிந்து அசரங்க தெரிவானார். 20 – 20 தொடர் ஒன்றை அணி இலங்கை அணி வெள்ளையடிப்பு செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.