2015 ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் எவ்வித அரசியல் கொலைகளும் இடம்பெறவில்லையென அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராதலக்ஷ்மன் பிரேமசந்திரனின் நிகழ்வு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று எந்தவொரு நபரும் பயம், சந்தேகமின்றி வாழக்கூடிய உரிமையை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். எந்தவொரு நபரும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட பயப்படத் தேவையில்லை. எதிர்ப்பவர்களை கொலை செய்யும் அரசியல் கலாசாரத்தை எமது நாட்டிலிருந்து நாம் இல்லாது செய்தமை குறித்து திருப்தி அடையவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவும் கருத்து வெளியிட்டார். கடந்த முறை மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தமை அவரை சூழயிருந்தவர்களே காரணமாகும். இம்முறையும் கோட்டாப்பாய ராஜபக்ஷவை சூள அவ்வாறானவர்களே இருக்கின்றனர். இவர்கள் வந்தால் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் எவ்வித மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லையென ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டினார்.