ஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த எட்டு வீர வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர். 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 240 வீர வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு இந்த குத்துச்சண்டை போட்டியின் மூலம் சர்வதேச அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை குத்துச்சண்டை போட்டி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளர்.