ஐஸ் போதைப்பொருடன் கைதுசெய்யப்பட்ட இரு பெண்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இரண்டு கோடியே 54 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதாகினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மகளும் தாயும் இந்தியாவிலிருந்து இவ்வாறு போதைப்பொருளை எடுத்துவந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணப்பொதியில் சூட்சுமமாக மறைத்துவைக்கப்பட்டு இவை எடுத்துவரப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர்களென சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.