தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வெளியேறும் பகுதியில் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் 6 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பிரதான ஹெரோயின் விற்பனையாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஹெரோயின் வர்த்தகம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட 50 கிலோகிராம் ஹெரோயின் கடவத்தை பகுதியில் பெறப்பட்டு அத்துருகிரிய பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பொரளை மற்றும் நுகேகொடை பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்கள சோதனையிடும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.