மலைநாட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் இன்று காலை சேவையை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேபோல் நாவலப்பிட்டியிலிருந்து பதுளை வரை சரக்கு ரயிலும் பயணத்தை முன்னெடுத்துள்ளது.
மேலும் பதுளை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 ரயில்கள் இன்று காலை முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ரயில்வே தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்டம் நேற்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருகின்றன. அதற்கமைய எதிர்வரும் சில மணித்தியாலங்களில் ரயில் சேவை முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.