விரோத கொள்கைகளை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லையென வடகொரியா தெரிவித்துள்ளது. சுவீடனில் இருநாட்டு பிரதிநிதிகளும் நேற்றைய தினம் சந்தித்திருந்தனர். இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருந்தபோதும், தமது நாடு தொடர்பில் அமெரிக்கா பின்பற்றும் விரோத கொள்கைகள் கைவிடப்படவேண்டுமென வடகொரியா வலியுறுத்தியுள்ளது.
சுவீடனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்கா தொடர்பில் வடகொரியா அதிருப்தியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை விரைவில் இருநாடுகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதை முன்னிட்டே வடகொரியா இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.