அதிநவீன ஏவுகணைகளை யுக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. யுக்ரேன் ஜனாதிபதி வொலொடிமிர் ஷெலென்ஷ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருவருக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய அதிநவீன 150 ஏவுகணைகள் யுக்ரேனுக்கு வழங்கப்படவுள்ளன. இதனூடாக யுக்ரேனில் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு இரு நாடுகளுக்குமிடையிலான வெளியுறவு கொள்கைகளும் வலுப்படுத்தப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.