இன மற்றும் மத பேதங்களுக்கு தான் ஒருபோதும் இமளிக்கபோவதில்லையென ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற சந்திப் பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பதை போன்று ஏனைய மதங்களுக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்கி இன மற்றும் மத பேதங்களுக்கு முற்றுபுப்புள்ளி வைக்க போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாஷிம், ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பின் போது இணைந்திருந்தனர்.