முதியோர் சங்கங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்க போவதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். ITN ஹத்வெனி பெய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(எமது நாட்டில் 13 ஆயிரத்து 500 முதியோர் சங்கங்கள் காணப்படுகின்றன. இவற்றை பலப்படுத்த வேண்டியுள்ளன. ஒரு சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். முதல் கட்டத்தின் கீழ் 2 ஆயிரம் சங்கங்களுக்கு இந்நிதி வழங்கப்படும். இச்சங்கத்தின் மூலம் ஏதேனும் சிறு கைத்தொழில் முயற்சியொன்றை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாயின் சமுர்தி வங்கி மூலம் அவர்களுக்கு கடனை பெற்றுக் கொடுப்போம். இவ்வாறு வழங்கப்படுகின்ற கடனை பெற்று இவர்களுக்கு எமது பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் இத்திட்டத்தை முன்னெடுப்போம். முதியோரின் நலன்புரி விடயங்களுக்கு மேலதிகமாக அவர்களை பலப்படுத்தவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.)
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=XrhS2e-BZ_s&feature=youtu.be&fbclid=IwAR3kI-e_CzAsqUZGDh3o_iyO18PvJjuolPr8dq1_T6fOg5Xw1WknBucJgFQ”]