உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேட அம்சமாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வுக் காலத்தை கழிக்கும் முதுமைப் பருவமும் ஒன்று போல் எமது கவனம் செலுத்தப்பட வேண்டிய இரு வாழ்க்கைப் பருவங்களாகுமென பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.