ஜம்மு கேஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் கேஷ்மீரில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட கேஸ்மிரில் மேலதிகமாக ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்திய – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பில் ஐ.நா பொதுச்சபை அமர்விலும் கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.