இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டுவண்டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 03.30க்கு கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தசுன் சானக்க தலைமையில் களமிறங்கவுள்ளது. பாகிஸ்தான் அணி சப்ராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும். இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை புறக்கணித்துள்ளனர். இதனால் இளம் வீரர்களை கொண்ட அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் அதி தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.